Wednesday, October 5, 2011

வெற்றித்திருநாள் விஜய தசமி



durga maa
ஸர்வ மங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்து தே


சரணாகத-தீநார்த்த-பரித்ராண-பராயணே
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்து தே 
Maa Durga Goddess
ஒன்பது நாள் நவராத்திரிகள் அன்னை மஹிஷாசுரனுடன் போரிட்டு அவனை வென்ற நாள்தான் விஜய தசமி, என்னதான் தீமை ஆட்டம் போட்டாலும் முடிவில் நன்மையே வெல்லும் என்றும் அனைவருக்கும் உணர்த்தும் நாள்.

தீய சக்தி கொண்ட அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழித்து வெற்றி வாகை சூடிய தேவி, அந்தந்த அசுரர்களை மாய்த்தவள் என்ற விதத்தில் அவர்கள் பெயரைக் கொண்டு துதிக்கப்படுகிறாள். அந்த அசுரர்களுடன் தேவி நடத்திய அப்போர்கள் மைசூர் நகரை ஒட்டியே நடைபெற்றதாக ஐதீகம்! இக்கருத்துக்கு ஆதாரமாகச் சண்ட முண்டர்களை அழித்தவள் சாமுண்டீஸ்வரி! 
மகிஷனை மாய்த்தவள் மகிஷாசுர மர்த்தனி போன்ற நாமங்களைக் கூறலாம்
வங்காளத்திலோ தங்கள் அன்னையர் இல்லத்திற்கு தன் குழந்தைகளான, சரஸ்வதி. லக்ஷ்மி, கணேசன், முருகன், மருமகள் அப்ராஜிதாவுடன் திருக்கயிலாயத்திலிருந்து தன் தாய்வீட்டிற்கு வந்த அன்னை துர்கா மீண்டும் திருக்க்யிலாயத்திற்கு செல்லும் நாளாக சிறப்பிக்கின்றனர்.
jai mata di g by vikas mehta
. மைசூரிலே தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது

மராட்டியர்கள் சின்ன மண் கிண்ணங்களில் பாலிகை தெளித்து அதாவது மண் நிரப்பி, நவதான்யங்களை அதில் விதைத்துப் பின் தினமும் தண்ணீர் விடுகிறார்கள்..

அதன் பசுமையான வளர்ச்சியைப் பார்த்து தம் வாழ்க்கையையும் கணிக்க்கிறார்கள். 

பின் விஜயதசமி அன்று கடலில் கலக்கிறார்கள். அவர்களும் மும்பாதேவி கோவிலுக்கும், ஸ்ரீ மஹாலட்சுமி கோவிலுக்கும் தவறாது செல்கின்றனர்

வட நாட்டில் இராமபிரான் இராவணனை வென்ற நாளாக 
விஜயதசமி கொண்டாடப்படுகின்றது.

 இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்படும் ராம் லீலா சிறப்பாக கொண்டாடப்படும் நாள்
ராமர் இராவணனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றதை நவராத்திரியாகக் கொண்டாடுகிறார்கள். 

அதர்மம் அழியும், தர்மம் வெல்லும் என்பதைச் சிறப்பாக "ராம் லீலா" என்று பத்து நாட்களும் நாடகம் நடத்துகின்றனர். தில்லியில் ராம்லீலா என்ற பெரிய மைதானத்தில் துளசிதாசரின் இராமாயணத்தை நாட்டிய நாடகமாக நடிக்கின்றனர்.

நடுவே வால்மீகி இராமாயணத்தின் ஸ்லோகங்களும் சேர்க்கப்படுகின்றன. ஸ்ரீராம் தியேட்டர்ஸ் ஒவ்வொரு வருடமும் இதை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். வெளி நாடுகளினின்றும் பல மக்கள் இதைக் காண வருகின்றனர்.



அந்த மைதானத்தில் பிரும்மாண்டமான மூன்று அசுர பொம்மைகள் செய்து வைக்கின்றனர் - இராவணன், கும்பகர்ணன் மற்றும் இந்த்ரஜித். 

அந்தப் பொம்மைகளில் பல தரப்பட்ட வெடிகள் உள்ளே வைக்கப்படுகின்றன. கடைசி நாள் ஸ்ரீராமர் இராவணனை வதம் செய்ய இரதத்தில் இலக்குவன் மற்றும் அனுமாருடன் வருவார். 
இராவணனைத் துரத்தித் துரத்தி வில் எய்துவார். 

அந்த மைதானத்தைச் சுற்றிச்சுற்றி இருவரும் சண்டையிட்டுக் கொண்டே வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். பின் தருமம் ஜெயிக்கும். 

முதலில் இந்திரஜித் அடிபட்டு மலை போல் சாய்வான்,

பின் அவனைத் தொடர்ந்து கும்பகர்ணனும் அப்படியே விழுவான்.

இவர்கள் விழ உள்ளிருந்த விதவிதமான பட்டாசுகள் வெடிக்கும்.

பின் இராவணனுக்கும் இதே கதிதான். அவன் மேல் அம்பு படும் சமயம் அதனுள் இருக்கும் வெடிகள் ஊரையே கூட்டி விடும்.

இராவணன் பெரிய சத்தத்துடன் கீழே சாய்வான். 'ஸ்ரீ ராமச்சந்த்ர கீ ஜய்! பரமசுத அனுமானகீ ஜய்!'என்ற கோஷங்கள் முழங்கும்.

இராவணன் அசுர பொம்மையிலிருந்து பல வர்ணஜாலங்கள் உண்டாகி நம்மை பிரமிக்க வைக்கும். 

கடைசியில் ஆகாயத்தில் ஒரு நீலப் பிரகாசமான ஒளி போய் கலக்கும். கடைசியில் வெடிக்கும். 

நாம் காதை மூடிக் கொண்டுதான் பார்க்க வேண்டும். அத்தனை சத்தம். 
ஒரு குண்டு வெடிப்பது போல் இருக்கும்.
மஹாபாரதக் கதையில் பஞ்ச பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞாதவாசம் முடிந்து தாங்கள் வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களையெல்லாம் எடுத்து அந்த ஆயுதங்களுக்கு பூஜை செய்த நாள். 

ஆயுதபூஜை செய்யும் பழக்கம் இதிலிருந்துதான் தொடங்கியது. வைணவத்தலங்களில் அதனால்தான் விஜயதசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் சேவை சாதித்து வன்னி மரத்தில் அம்பு எய்யும் விழா சிறப்பாக நடைபெறுகின்றது.

விஜயதசமி தினம் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் அன்னையின் அருளால் அது நிச்சயம் வெற்றி அடையும். 

குறிப்பாக சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களுக்கு பூஜை செய்து இன்று படிப்பை ஆரம்பிக்க மிகவும் உகந்தது. கேரள மாநிலத்தில் அக்ஷராப்பியம் குழந்தைகளுக்கு விஜயதசமி தான் செய்யப்படுகின்றது.

மதுகைடபர், சும்ப நிசும்பன், சண்ட முண்டன், இரக்த பீஜன், மஹிஷாசுரன் ஆகியோரை சம்ஹாரம் செய்து தேவர்களையும் மனிதர்களையும் சர்வ லோகங்களையும் காத்து இரக்ஷித்தருளிய ஜெய துர்க்கையை, விஜய மஹிஷாசுரமர்த்தினியை, ஜெய ஜெய சாமுண்டியை மனமார துதித்து நோயின்மை, கல்வி, தனம், தானியம், அழகு, புகழ், பெருமை, வலிமை, இளமை, அறிவு, சந்தானம், வலிமை, துணிவு, வாழ்நாள், நல் ஊழ், நுகர்ச்சி என்னும் பதினாறு செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ இமய கிரி ராஜ தனயையிடம் மாதேவி அன்னையிடம் விஜய தசமி சிறப்புத்திருநாளில்   வேண்டி நலம் பெறுவோம்.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
Ramlila Mela.

47 comments:

  1. காணக் கிடைக்காத அருமையான படங்கள்
    அறிய முடியாத அரிய செய்திகள்
    வெற்றித் திரு நாளில் அள்ளி வழங்கியமைக்கு
    மனமார்ந்த நன்றி
    அனைவரும் நலம் பெற நித்தம் புதுப் புது
    மங்களச் செய்திகளை அள்ளிதரும் தாங்களும்
    தங்கள் குடும்பதாரும் எல்லா நலங்களையும்
    குறையின்றி எல்லா வளங்களையும் பெற
    அந்த சாமூண்டீஸ்வரியின் பாதம் பணிகிறேன்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. தில்லி ராம் லீலா பற்றிய செய்திகள் அருமை.... நிறைய அரசியல்வாதிகளும் வருவார்கள் இந்த விழாவில்... :(

    ReplyDelete
  3. படங்கள் எல்லாம் அருமை தகவல்களும் புதுசு நன்றி. சில படங்களை நான் உபயோகித்து கொள்கிறேன்

    ReplyDelete
  4. அருமையான படங்களை போட்டு விஜய தசமி கொண்டாட வைத்துவிட்டீர்கள் ... அதிலும் அன்னை துர்கா படம் நேரில் வந்தது போல் இருக்கிறது ...

    ReplyDelete
  5. விஜயதசமி பற்றிய அருமையான பதிவும் அசத்தலான புகைப்படத்தொகுப்பும்
    நன்றி

    ReplyDelete
  6. Ramani said...
    காணக் கிடைக்காத அருமையான படங்கள்
    அறிய முடியாத அரிய செய்திகள்
    வெற்றித் திரு நாளில் அள்ளி வழங்கியமைக்கு
    மனமார்ந்த நன்றி
    அனைவரும் நலம் பெற நித்தம் புதுப் புது
    மங்களச் செய்திகளை அள்ளிதரும் தாங்களும்
    தங்கள் குடும்பதாரும் எல்லா நலங்களையும்
    குறையின்றி எல்லா வளங்களையும் பெற
    அந்த சாமூண்டீஸ்வரியின் பாதம் பணிகிறேன்
    வாழ்க வளமுடன்/

    அருமையான வாழ்த்துக்களுக்கு மன்ம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    தாங்களும், தங்கள் குடும்பதாரும் எல்லா நலங்களையும்
    குறையின்றி எல்லா வளங்களையும் பெற அன்னையைப் பிரர்த்திக்கிறேன்.

    ReplyDelete
  7. வெங்கட் நாகராஜ் said...
    தில்லி ராம் லீலா பற்றிய செய்திகள் அருமை.... நிறைய அரசியல்வாதிகளும் வருவார்கள் இந்த விழாவில்... /

    அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. middleclassmadhavi said...
    Thanks for sharing!//

    கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. தி. ரா. ச.(T.R.C.) said...
    படங்கள் எல்லாம் அருமை தகவல்களும் புதுசு நன்றி. சில படங்களை நான் உபயோகித்து கொள்கிறேன்/

    அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete
  10. பத்மநாபன் said...
    அருமையான படங்களை போட்டு விஜய தசமி கொண்டாட வைத்துவிட்டீர்கள் ... அதிலும் அன்னை துர்கா படம் நேரில் வந்தது போல் இருக்கிறது .../

    அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. மதுரன் said...
    விஜயதசமி பற்றிய அருமையான பதிவும் அசத்தலான புகைப்படத்தொகுப்பும்
    நன்றி/

    கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  12. இனிய தசரா நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  13. விஜயதசமி படங்களும் பதிவும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  14. விஜயதசமி படங்களும் பதிவும் அருமையா இருக்கு
    சரஸ்வதி பூஜா நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ”வெற்றித்திருநாள் விஜயதஸமி”
    தலைப்பிலேயே வெற்றிக்கொடியை நட்டு விட்டீர்கள்.

    முதல்படத்தில் புலிமேல் கம்பீரமாக அமர்ந்து ஜொலித்திடும் அம்பாள். என் பாதம் இதோ பற்றிடுங்கள் என்பதுபோல அமர்ந்த கோலம் அருமை.

    [பல அலுவலகங்களின் இன்று பணிபுரியும் அம்பாள்களில் சிலர் கால்மேல் கால்போட்டு அமர்வதும் இந்த அம்பாளைப்பார்த்து தானோ, என கற்பனை செய்து பார்த்தேன்]

    ReplyDelete
  16. ஸர்வமங்கல......
    சரணாகத..........
    தேவி நாராயணி நமோஸ்துதே!

    இரு ஸ்லோகங்களும் அழகோ அழகு.

    என்னதான் தீமை ஆட்டம் போட்டாலும் கடைசியில் நன்மையே வெல்லும். இதைக் குறிப்பதே விஜய தஸமி.

    உண்மையே! நம்புவோம்!!

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ”வெற்றித்திருநாள் விஜயதஸமி”
    தலைப்பிலேயே வெற்றிக்கொடியை நட்டு விட்டீர்கள்.

    முதல்படத்தில் புலிமேல் கம்பீரமாக அமர்ந்து ஜொலித்திடும் அம்பாள். என் பாதம் இதோ பற்றிடுங்கள் என்பதுபோல அமர்ந்த கோலம் அருமை.

    [பல அலுவலகங்களின் இன்று பணிபுரியும் அம்பாள்களில் சிலர் கால்மேல் கால்போட்டு அமர்வதும் இந்த அம்பாளைப்பார்த்து தானோ, என கற்பனை செய்து பார்த்தேன்]


    அருமையன கருத்துரைகு நன்றி ஐயா.

    வீர தேவைப்படும் அசுர வத்த்தின் போது வீராசனம் தேவைதானே!

    அழ்காக அடக்கமாக இருந்ததால்தானே சும்ப நிசும்பர்கள் அன்னையை திருமணம் செய்ய விரும்பினார்கள்??!

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஸர்வமங்கல......
    சரணாகத..........
    தேவி நாராயணி நமோஸ்துதே!

    இரு ஸ்லோகங்களும் அழகோ அழகு.

    என்னதான் தீமை ஆட்டம் போட்டாலும் கடைசியில் நன்மையே வெல்லும். இதைக் குறிப்பதே விஜய தஸமி.

    உண்மையே! நம்புவோம்!!/

    நன்மையே வெல்ல பிரார்த்திப்போம்..
    அழகான கருத்துரைக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  19. ஆயுதங்களையும் அபய ஹஸ்தத்தையும் அசைத்திடும், சாமுண்டேஸ்வரி அல்லது மஹிஷாசுர மர்த்தினி படமும் நன்கு காட்டியுள்ளீர்கள்.

    வண்ணாத்திப்பூச்சிகள் தங்களின் இறக்கைகளால் சாமரம் வீசிட, தொந்திப்பிள்ளையார் டபுள் ஆக்டில் இருபுறமும் நின்று, வரவேற்பு அளிதிதிட, சிம்ஹ வாஹணத்தில் ஏதோ ஒரு பூங்காவில் நுழைந்து வரும் அம்மன் பல்வேறு வண்ணங்களில் பரவச மூட்டுவதாகக் காட்டியுள்ளீர்கள்.

    எங்குதான் பார்ப்பீர்களோ, எப்படித்தான் பிடிப்பீர்கள் இத்தகைய வண்ண வண்ணப் படங்களை, அனுதினமும், அதுவும் எங்களுக்காகவே!!

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆயுதங்களையும் அபய ஹஸ்தத்தையும் அசைத்திடும், சாமுண்டேஸ்வரி அல்லது மஹிஷாசுர மர்த்தினி படமும் நன்கு காட்டியுள்ளீர்கள்.

    வண்ணாத்திப்பூச்சிகள் தங்களின் இறக்கைகளால் சாமரம் வீசிட, தொந்திப்பிள்ளையார் டபுள் ஆக்டில் இருபுறமும் நின்று, வரவேற்பு அளிதிதிட, சிம்ஹ வாஹணத்தில் ஏதோ ஒரு பூங்காவில் நுழைந்து வரும் அம்மன் பல்வேறு வண்ணங்களில் பரவச மூட்டுவதாகக் காட்டியுள்ளீர்கள்.

    எங்குதான் பார்ப்பீர்களோ, எப்படித்தான் பிடிப்பீர்கள் இத்தகைய வண்ண வண்ணப் படங்களை, அனுதினமும், அதுவும் எங்களுக்காகவே!!//

    தங்கள் கருத்துரைகளுக்குப் பின் படங்கள் இன்னும் அர்த்தமுள்ளதாக காட்சி அளிக்கின்றன.

    பரவசமூட்டும் அரிய கருத்துரைகளுக்கு மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete
  21. ராம்லீலா என்று ஒரு மிகப்பெரிய மைதானம் டெல்லியில் இருப்பதே பலபேர்களுக்கு சமீபத்தில் நடந்த ஒரு சில அரசியல் நிகழ்வுகளால் மட்டுமே தெரிந்திருக்கும்.

    அதை நீங்கள் அழகாக பலவித ஆன்மீக நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி, மிகச் சிறப்பான கதைகளையும் சொல்லி, காட்சிகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே! வியந்து போனேன்.

    ReplyDelete
  22. மஹாபாரதம் - பஞ்சபாண்டவர் - வன்னி மரம் - ஆயுத பூஜை. என்ன தான் நாம் படித்திருந்தாலும் அதை ஞாபகமாக இங்கே கொண்டுவந்து நுழைத்துள்ளீர்களே, தங்களின் புத்திசாலித்தனத்தை மெச்சோ மெச்சென்று மெச்சுகிறேன்.

    ReplyDelete
  23. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ராம்லீலா என்று ஒரு மிகப்பெரிய மைதானம் டெல்லியில் இருப்பதே பலபேர்களுக்கு சமீபத்தில் நடந்த ஒரு சில அரசியல் நிகழ்வுகளால் மட்டுமே தெரிந்திருக்கும்.

    அதை நீங்கள் அழகாக பலவித ஆன்மீக நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி, மிகச் சிறப்பான கதைகளையும் சொல்லி, காட்சிகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே! வியந்து போனேன்.//

    ஆசை என்று அஜீத்குமர் சுவலட்சுமி நடித்த படத்தில் இந்த காட்சி ராவணவதத்தில் ஆரம்பித்து அதே அடுத்த ஆண்டு காட்சியுடன் முடிந்ததும் நினைவில் நிழலாடுகிறது

    ReplyDelete
  24. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மஹாபாரதம் - பஞ்சபாண்டவர் - வன்னி மரம் - ஆயுத பூஜை. என்ன தான் நாம் படித்திருந்தாலும் அதை ஞாபகமாக இங்கே கொண்டுவந்து நுழைத்துள்ளீர்களே, தங்களின் புத்திசாலித்தனத்தை மெச்சோ மெச்சென்று மெச்சுகிறேன்./

    மெச்சி அளித்த அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  25. கேரளாவிலும், மேலும் சில இடங்களிலும் கூட விஜயதஸமித் திருநாளில் துவங்கும் அக்ஷராப்பியம் அடடா, முக்கியமான இதை மட்டும் விட்டு விடுவீர்களா என்ன! அதற்கு ஒரு சபாஷ்.

    ReplyDelete
  26. கல்வி முதல் .. நுகர்ச்சி வரையிலான, பதினாறு செல்வங்களையும், எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு வழங்கி அருளுமாறு,
    ஜெய துர்க்கையை,
    விஜய மகிஷாசுரமர்த்தினியை,
    ஜெய ஜெய சாமுண்டியை,
    மனமுருகிப் பிரார்த்திக்கிறேன்.

    ”நல்லார் ஒருவர் உளறே அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை”

    தாங்கள் சுபிட்சமாக, சந்தோஷமாக, ஆர்வமாக, ஆசையாக, பக்தியாக, பரவசமாக இருந்தாலே போதும், எங்களுக்கு.

    தங்களின் அன்றாடப் பதிவுகளைப் படித்து, நீங்கள் காட்டிடும் அழகழகான தெய்வீகப் படங்களை தரிஸித்து, அதன் மூலமே, [பூவோடு சேரும் நார் போல] மோட்சம் பெற்றிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    அம்பாளுக்கு என் பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள். நன்றிகள்.

    மனமார்ந்த ஆசிகள்.
    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  27. "பொங்கும் மங்களம் எங்கும் தங்குக”

    சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதஸமி நல் வாழ்த்துக்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.

    நீடூழி வாழ்க!
    அனைத்து
    வளங்களும்
    நலங்களும்
    பெற்றிடுக!!

    நேற்று போல இன்று போல் நாளையும் அமையட்டும். நல்லதாக நடக்கட்டும். நட்புகள் என்றுமே இன்றுபோல் தழைத்தோங்கட்டும்.

    ReplyDelete
  28. விஜயதசமி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. விஜயதசமி பற்றி சொல்லுகின்ற நல்ல பதிவு.

    படங்கள் அருமை

    ReplyDelete
  30. விஜயதசமி பற்றி சொல்லுகின்ற நல்ல பதிவு.

    படங்கள் அருமை

    ReplyDelete
  31. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. அருமை படங்கள்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  33. very pretty writings Rajeswari.
    The pictures are ery nice too.
    I enjoyed well.
    Thanks.
    viji

    ReplyDelete
  34. viji said...
    very pretty writings Rajeswari.
    The pictures are ery nice too.
    I enjoyed well.
    Thanks.
    viji//


    தவறாதவருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றிகள் தோழி.

    ReplyDelete
  35. நிரூபன் said...
    இனிய மதிய வணக்கம் அம்மா,

    விஜயதசமி பற்றி விரிவாகச் சொல்லுகின்ற நல்ல பதிவு.

    உங்களுக்கு இனிய நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!/

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்
    இனிய நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. shanmugavel said...
    விஜயதசமி வாழ்த்துக்கள்./

    நன்றி. தங்களுக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. வைரை சதிஷ் said...
    விஜயதசமி பற்றி சொல்லுகின்ற நல்ல பதிவு.

    படங்கள் அருமை/

    நன்றி. தங்களுக்கு இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்./

    நன்றி ஐயா.

    ReplyDelete
  39. DrPKandaswamyPhD said...
    அருமை./

    நன்றி ஐயா.

    ReplyDelete
  40. அருமையான படங்கள்.

    ReplyDelete
  41. விஜயதசமி பற்றிய தகவல்கள் அருமை.படங்கள் மிக அழகு.

    ReplyDelete
  42. என் தாமதமான விஜயதசமி நல்வாழ்த்துகள்...

    படம், பாடம், கருத்து, தகவல் எல்லாம் கலந்த கலவையாக அருமையான படைப்பு...

    ReplyDelete
  43. மிகச் சிறப்பான ஒரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. ;)
    ஸ்ரீ ராம ராம ராமேதி
    ரமே ராமே மநோரமே!

    ஸஹஸ்ரநாம தத்துல்யம்
    ராமநாம வராநநே!!

    ReplyDelete
  45. 1124+9+1=1134 ;)))))

    பெரும்பாலான என் கருத்துக்களுக்கு சிரத்தையாக பதில் அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    என் கருத்துரைக்குப்பின்தான் படங்கள் இன்னும் அர்த்தமுள்ளதாகக் காட்சியளிப்பதாக எழுதி மகிழ்வளித்துள்ளீர்கள்.

    சந்தோஷம். நன்றிகள்.

    தாங்களாவது மகிழ்ச்சியாக இருப்பதில் எனக்கும் சந்தோஷமே.

    ReplyDelete