Wednesday, February 19, 2014

ஜோதிர்லிங்க தரிசனம் சேது பீடம் இராமேஸ்வரம்







கடலிடை மலைகள் தம்மால் அடைத்து மால் தரும் முற்றித்
திடலிடைச் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவில் சுழல்கின் றேன் தூய்மையின்றி
உடலிடை நின்றுப் பேரா ஐவர்ஆட் டுண்டு நானே. –திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 8வது தலம்.

 சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது.

ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.

பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம்.

அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம்.

உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

1212 தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம்உலகப்புகழ் பெற்றது.

அம்மனின் சக்தி பீடங்களில் இது சேது பீடமாகும்.

மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர்.

காலை 4 மணி முதல் 1 மணி வரை,
மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பிரகாரத்தில் சீதை, மணலில் லிங்கம் பிடிக்க, அதற்கு ராமர் பூஜை செய்யும் காட்சி சிலையாக வடிக்கப் பட்டுள்ளது.

அருகில் ஆஞ்சநேயர், சுக்ரீவன் உள்ளிட்ட வானர வீரர்களும் இருக்கின்றனர். மேலும் நளன், நீலன், கவனால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளும் பிரகாரத்தில் உள்ளன.

சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர்.

அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

 இரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர்.

நாகதோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

 காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.

கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

காசி கங்கையிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும்.

சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது.

மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக் கொடுக்கலாம்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்: புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர்.

எமதர்மராஜா அவர்களை விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார்.

 "மகாளயம்' என்றால் "கூட்டமாக பூமிக்கு வருதல்' எனப்பொருள்.

இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும்.

பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.

சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று ராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன.

விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, "ஜோதிர்லிங்கம்' ஆயிற்று.

இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

முதல் தரிசனம் : ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, "விஸ்வநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.

ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார்.

விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது.

ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார்.

அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும்.

ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.

ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை.

அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாத போது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.

ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

ராமேஸ்வரம் கடல், "அக்னி தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது.

சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் "அக்னி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்வதுண்டு.

குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.

அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள்.

அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.

மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான்.

பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.

அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது. இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார்.

அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள்.

இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

 பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும்.

இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

தீர்த்தமும் பலனும்: 1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)

3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)

4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி

5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு

6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்

7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.

8. நள தீர்த்தம்,

9. நீல தீர்த்தம்,

10.கவய தீர்த்தம்,

11.கவாட்ச தீர்த்தம்,

12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.

13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,

14. கங்கா தீர்த்தம்,

15. யமுனை தீர்த்தம்,

16. கயா தீர்த்தம்,

17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்

18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்

19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி

20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்

 21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்

 22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

பாதாள பைரவர் : ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு "பாதாள பைரவர்' என்று பெயர்.

இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.


சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

காவியுடையில் இரட்டை விநாயகர் : பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர்.

இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது.

விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் நிஜ பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம்.

இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.

பதஞ்சலி முக்தி தலம் : பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார்.

இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும்.

யோகக்கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.

பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால், நம் கண்களுக்கு தெரியமாட்டார்.

விபீஷணன் ஸ்தாபித்த ரங்கநாதர் : அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார்.

ராமர் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான்.

அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

 முத்துராமலிங்க சேதுபதி மன்னர், மூன்றாம் பிரகாரத்தை
மிகப் பெரிதாகக் கட்டியுள்ளார்.

1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது.

ஸ்படிக லிங்க பூஜை : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது.

தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது.

இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.

சக்தி பீடங்களில் இத்தலம், "சேதுபீடம்' ஆகும்.

அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.

 12 ஜோதிர்லிங்க தரிசனம்! : இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும் ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

விவேகானந்தர் வருகை : வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார்.

அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவில்,""அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார். தூய்மையில்லாமல் கோயிலுக்குள் செல்பவர்கள், தங்களின் பாவங்களோடு மேலும் ஒரு பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,'' என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

தீவுக்குள் ராமர் கோயில் : விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான்.

ராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான்.

அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன்,

இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.

அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது.

சுவாமிக்கு "கோதண்டராமர்' என்பது திருநாமம்.

இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான்.

அவனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார்.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.

 ராமாயண திருவிழா : ராமநாதர் கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர்.

ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர்.

ராமலிங்க பிரதிஷ்டையின்போது ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்க பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.

வால் இல்லாத ஆஞ்சநேயர் : கயிலாயத்தில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார்.

ஆனாலும், அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார்.

இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது.

ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில், சிப்பி பதிந்திருப்பதைக் காணலாம்.

சீதையை மீட்பது குறித்து ராமர் ஆலோசித்த இடத்தில், "ராமர் பாதம்' இருக்கிறது.

பொதுவாக கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை.

இது எந்த பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.

கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு.

வடநாட்டு பக்தர்கள் தலையில் ராமாயணம் புத்தகத்தை சுமந்து கொண்டு ராமநாத சுவாமி சன்னதியை சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.
Pictures of Sri Rameswaram Temple Images

















27 comments:

  1. காலையில் சிறப்பான கோயிலின் தகவல்கள் வாசிக்க மனதிற்குள் மகிழ்ச்சி... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா.
    தங்களின் தகவல் என்னை பிரமிக்கவைக்கிறது.... படங்கள் எல்லாம் அழகு... வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அடுத்த வாரம் ராமேச்வரம் செல்ல இருக்கும் எனக்கு உங்கள் பதிவு கோயிலை அனுபவித்து பார்க்க உதவும். மிக்க நன்றி.

    ReplyDelete
  4. சில ஆண்டுகளுக்கு முன் அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ஸ்ரீ ராமநாதஸ்வாமியை தரிசனம் செய்ததை கண்முன் நிறுத்தி விட்டீர்கள்.. மிக்க நன்றி..

    ReplyDelete
  5. ராமேஸ்வரம் தலம் பற்றிய விரிவான செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது! நல்லதொரு பதிவு! நன்றி!

    ReplyDelete
  6. ராமேஸ்வரம் போகவேண்டும் என்று ஒவ்வொருமுறை நினைத்து போகமுடியாமலேயே போய்விட்டது. அது ஒரு குறையாகவே இருந்தது எனக்கு இத்தனை நாளும். ஆனால் உங்கள் இந்த பதிவு படித்து முடித்தபோது ராமேஸ்வரம் எப்படியாவது போயே தீரவேண்டும் இம்முறை இந்தியா சென்றால் என்ற முடிவெடுக்கவும் முடிந்தது, அதே சமயம் கோயிலுக்கு சென்றால் இரண்டாம் முறையாக கோயிலுக்கு சென்றது போல் தான் என்னால் உணரமுடியும் ஏனெனில் அத்தனை தத்ரூபமாக இங்கே நீங்கள் படங்களுடன் கதைகளுடன் ஸ்தல புராணம் கோயில் திறந்திருக்கும் நேரம் பதஞ்சலி முனிவரின் முக்தி அடைந்த இடம் சீதையின் கற்பு அக்னியையே சுட்டதால் அந்த வெம்மையை இங்கே வந்து தணித்ததால் அக்னி தீர்த்தம் என்றும், சிவலிங்கம் பெயர்க்க முயன்று வால் அறுந்து அந்த கோலத்துடனே காட்சி அளிக்கும் அனுமன், அம்பாள் பக்தர் ராயர் செய்த உப்பு லிங்கம் எல்லாமே ஒரு வலம் வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறதுப்பா. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  7. ராமேஸ்வரம் பற்றிய அனைத்து விவரங்களையும் அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள். ஆயிரங்கால் மண்டபம் படம்அழகு.

    ReplyDelete
  8. விபரங்களும் புகைப்படங்களும் அருமை!

    ReplyDelete
  9. கடைசி படத்தில் விளக்கு பூஜை மிகவும் வெரி வெரி ப்யூட்டிஃபுல் கவரேஜ். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  10. பிரகாரத்தை சிங்கமுகத் தூண்களுடன், மேலே வரைந்துள்ள பெயிண்ட் செய்துள்ள அழகான கோலங்களுடனும், மிக வெளிச்சமாகக் காட்டியுள்ளது அருமையோ அருமை. ;)))))

    காணக் கண்கோடி வேண்டும்.

    >>>>>

    ReplyDelete
  11. இந்தக்கோயிலுக்கு என் அம்மாவுடன் நான் போய் அனைத்துக் கிணறுகளிலும் ஸ்நானம் செய்துவிட்டு, ஈர வஸ்திரங்களுடனேயே சிவ தரிஸனம் செய்த பழைய ஞாபகங்கள் வந்து மனதுக்கு மிகவும் மகிழ்வளித்தன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் . கருத்துரைகள் அனைத்திற்கும் நிறைந்த நன்றிகள்..

      ஒட்டு மொத்த உறவினர் குடும்பங்களும் ஒன்றுசேர்ந்து ரயிலில் பயணித்துராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்தோம்..அனைத்து கிணறுகளிலும் குளிக்கும் வாய்ப்பும் கிடைத்தது..

      மற்றொரு முறை பாகவதம் குழுவினருடன் இனிமையான பயணம்..
      மற்றொரு முறை தஞ்சாவூரின் பிரபல நூற்பாலையின் பொன் விழா
      கொண்டாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சென்றபோது விழா முடிந்ததும் ராமேஸ்வரம் தரிசனமும் கிடைத்தது .. அப்போது கிரஹணநேரம் நெருங்கியதால் ராமநாதர் கோவிலின் அனைத்து விக்ரஹங்களுக்கும் அரிசிமாவைக் கரைத்து சிலைகளின் மேல் ஊற்றி கவசம் போல பாதுகாத்தனர்..

      Delete
    2. ;))))) நிறைய தகவல்கள் மேலும் பகிர்ந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மிகவும் சந்தோஷம். ;)))))

      Delete
  12. அப்போது ‘மண்டபம்’ என்னுமிடத்திலிருந்து பேருந்தில் இராமேஸ்வரம் வரை செல்ல முடியாமல் இருந்தது. இரயிலில் மட்டுமே செல்ல முடியும்.

    மண்டபம் வரை சுற்றுலா பேருந்தில் நாங்கள் சென்றோம். அங்கு ’மண்டபம்’ என்ற இடத்தில் இறங்கி மனிதன் ஒரு நிமிடம் கூட நிற்கவே முடியாது. அவ்வளவு ஒரு மீன் நாற்றம் வீசும் இடம். எனக்குக் குடலைப்பிரட்டி பலமுறை நான் அங்கேயே வாந்தி எடுத்துவிட்டேன்.

    அங்கிருந்து நள்ளிரவில் இரயில் ஏறி [இரயிலில் கும்பலான கும்பல்] இராமேஸ்வரம் சென்றோம்.

    நானும் என் தாயாரும் அந்த இரயில் ஏறும் போது பிரிந்து விட்டோம். என் பிள்ளைகளில் ஒருவன் மட்டும் என் தாயாருடன். மற்றொருவனும் நானும் என் மனைவியும் வேறு ஒரு இரயில் பெட்டியில்.

    உள்ளூர அவர்கள் நல்லபடியாக இரயிலில் ஏறினார்களோ இல்லையோ என்ற கவலை ஒருபுறம். இந்தக்காலம் போல கைபேசி ஏதும் கிடையாதே !

    நல்லவேளையாக பிறகு இரயிலை விட்டு இறங்கியபின் பார்த்ததில் ஒரே மகிழ்ச்சி. நாங்கள் ஒரு முப்பது பேர்களாக சேர்ந்து தான் பயணம் செய்தோம். அதனால் கவலையேதும் இல்லை. இருந்தாலும் அந்த சிலமணி நேரங்கள் மட்டும் மனதுக்கு ஒரு வித திகிலாகிப்போனது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அதற்குள் நடை திறப்பதற்குள் தனுஷ்கோடி சென்று பார்க்கலாம் என்று காரில் சென்றோம் ..

      புயல் கடந்த பூமி அல்லவா ..சாலைகளெல்லாம் சேதமாகி மணற்பாங்காக இருந்தது..
      இதற்கு மேல் வாகனம் செல்ல முடியாது என மூன்று பக்கமும் கடல் அலைகளால் சூழப்பட்டு இது இந்து மஹா சமுத்திரம் , ஆர்ப்பரிப்பது அரபிக்கடல் , அமைதியாக இருப்பது வங்காள விரிகுடாஎன ஆச்சரியமாக மூன்று பெருங்கடல்களையும் பார்த்தோம் ..

      Delete
    2. தனுஷ்கோடியா ! மிகவும் பயங்கரமாக அந்தக்காலத்தில் பாதிக்கப்பட்ட இடமாச்சே! முக்கடலும் கூடுமிடமானதால் அது முக்கியமான தரிஸனமாகத்தான் நமக்குத் தோன்றி ஆவலை ஏற்படுத்தும். ஆச்சர்யமான செய்தியே தான்.

      Delete
  13. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கம் இது எனக்கூறியுள்ளது ஆச்சர்யமான தகவலாக உள்ளது.

    ஸ்ரீ இராமர் பூஜித்தது அல்லவா, அதுவே மேலும் சிறப்பானதாக அமைந்துள்ளது .... பாருங்கோ. !!!!!

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அப்போதுதான் கல்கியின் அலைஓசை நாவலை நூலகத்திலிருந்து வாங்கி படித்திருந்த நேரம் ..
      அதன் கதாநாயகி காதில் எப்போதும் கேட்டுக்கொண்டிருந்த அந்த அலைஓசையை அமானுஷ்ய தீவில் நானும் கேட்டேன்.. கடல் அலைகளை காலடியிலேயே கண்டிருந்த நாங்கள் வானுக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்து நாலாபுறமும் சூழ்ந்திருந்து மிகவும் இரைச்சலான ஓசையைக்கேட்டு திகிலடைந்தோம் ..
      அங்கிருந்த ஒரே ஒரு குடிசை டீ கடையாம் .. அங்கிருந்தவர் அமாவாசையும் அதுவுமாக எந்த நேரமும் கடல் பொங்கத்தயாராக இருக்கும் ..நாங்களே இந்த நேரத்துக்குமேல் இங்கு தங்கமாட்டோம் .. இப்படி சின்னக்குழந்தைகளை எல்லாம் அபாயகரமான இடத்திற்கு அழைத்து வரலாமா..சட் என்று இருட்டி விடும் வேகமாக கிளம்பிவிடுங்கள்.. தண்ணீரைத் தொடாதீர்கள் என்று எச்சரித்தார்..
      திகிலுடன் திரும்பித்திரும்பி அலை துரத்துகிறதா என்று பார்த்தவாறே வேகமாக ராமேஸ்வரம் வந்து அக்னி தீர்த்தத்தில்
      நீராடிக்கொண்டிருந்த போது கிரஹணம் முடிந்து ஆலயம் தூய்மை செய்யப்பட்டி நடை திறந்து சுவாமி ரிஷபவாஹனத்தில் வந்து தரிசனம் தந்தார்..

      Delete
    2. தங்களின் இந்த வர்ணனையே திகில் ஸ்டோரி படிப்பது போலத்தான் உள்ளது.

      திகிலுடன் திரும்பித்திரும்பி அலை துரத்துகிறதா என்று பார்த்தவாறே வேகமாக ராமேஸ்வரம் வந்துள்ளது மிகப்பெரிய தீரச்செயல் தான்.

      அந்த அலை ஓசைகளை அமானுஷ்யமான தீவினில் தாங்களும் கேட்டதை நானும் கற்பனை செய்து பார்த்தேன். ;)

      எங்கு போனாலும் தகுந்த துணையுடன் ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள் என அன்புடன் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete

  14. மிகவும் பிரும்மாண்டமான அந்தக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் போன்றே தங்களின் பதிவும் மிகவும், நீள, அகல உயரம் மட்டுமல்லாது ஆழம் நிறைந்த விஷயங்களுடன் உள்ளது - எனக்கு வியப்பளிப்பதாக உள்ளது.

    சிரத்தையுடன் எவ்வளவு ஒரு கடும் உழைப்பு உழைத்திருக்கிறீர்கள். அப்பப்பா ! அசந்து போனேன். ;))))))))))))))))))))))))

    >>>>>>

    ReplyDelete
  15. மஹாலக்ஷ்மி தீர்த்தத்தில் ஆரம்பித்து கோடி தீர்த்தம் வரை எழுதி அதனால் கிடைக்கும் பலன்களையும் எழுதி கோடி புண்ணியத்தைக் கட்டிக்கொண்டு விட்டீர்கள்.

    அழகான தங்களின் எழுத்துக்களைப் படிக்கப்படிக்க ஆசையாக உள்ளது.

    நேரில் தங்களுடன் கூடவே ஸ்தல யாத்திரையாக அந்த இடங்களுக்குச் சென்று வந்தது போன்றதோர் உணர்வை ஏற்படுத்தும் உன்னதமான எழுத்துக்கள் .... தங்களுடையது. தங்கமே தங்கம் தான் ! ;)

    >>>>>

    ReplyDelete
  16. இன்றைக்கு எனக்கு ஏற்பட்ட பல்வேறு இதர வேலைகளுடன், நெட் கிடைக்காமலும், மின் தடை ஏற்பட்டதாலும், அவற்றையெல்லாம் விட தங்கள் தளமே எனக்குக் கிடைக்காமல் என் கணனி என்னைப் பாடாய்ப்படுத்தியும், மிகவும் கஷ்டப்பட்டாவது கடைசியில் சேது ஸ்நானம் செய்து, ஜோதிர்லிங்க தரிஸனமும் கிடைத்ததில் மட்டில்லா மகிழ்ச்சியாக உள்ளது, எனக்கு.

    நெட்வொர்க் கிடைக்காமல் இருந்த நேரத்தில், நடுவில் ஒரு மணி நேரம் மட்டும், என் செல்லக்குட்டித் தங்கம் அநிருத் வந்து போனான். அதில் ஓர் தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.

    >>>>>

    ReplyDelete
  17. தங்களின் கடுமையான .... மிகக்கடுமையான உழைப்புக்கும், ஆர்வத்திற்கும், ஆற்றலுக்கும், அனைத்துக்குமே என் அன்பான நன்றிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.

    இன்றைய தங்களின் மிகப்பெரிய பதிவு ஓர் சரித்திர சாதனையாகத் தெரிகிறது, எனக்கு.

    பதிவுலகில் தாங்கள் என்றுமே ஓர் சாதனை திலகம் தான் ! வாழ்க !!

    பிரியத்துடன் பிரியும் VGK

    ooo ooo ooo

    ReplyDelete
  18. ராமேஸ்வரத்தைக் கண்ணெதிரில் கொண்டுவந்து நிறுத்திய புண்ணியம் உங்களுக்கு! விரைவில் சென்று தரிசிக்க ராமேஸ்வரன் என்று அழைக்கப்போகிறான் என்பது தெரியவில்லையே!

    ReplyDelete
  19. வராலாற்று சிறப்பு மிக்க ராமேஸ்வரம் திருத் தலத்தைக் கண்டு
    ரசித்த உணர்வு உள்ளத்தில் தேங்கும் வண்ணம் மிகச் சிறப்பாக
    உங்கள் பாணியில் தந்தமைக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் சகோதரி .

    ReplyDelete
  20. தெரியாத தகவல்கள். நன்றி . நல்ல விளக்கம்

    ReplyDelete
  21. தெரியாத தகவல்கள். நன்றி . நல்ல விளக்கம்

    ReplyDelete