Sunday, February 23, 2014

ஆழ்கடலுள் அற்புத உயிரினங்கள்.



கண்களே இல்லாமல் கடலுக்கடியில் வசிக்கும் ஓர் அபூர்வ ஜீவன் ஒன்று முள்ளம் பன்றி போன்ற தோற்றத்தில் இருக்கும், ஆனால் இது முள்ளம்பன்றி இல்லை.

மன்னார் வளைகுடா கடலில் வாழும் விநோத உயிரினங்கள் பலவற்றில் கடல் முட்தோலியும் ஓர் அரியவகை உயிரினம். 
தொடுதல், வெளிச்சம், வேதியியல் அமிலங்கள் உடலில் படுவதை உடனே உணர்ந்து கொள்ளுதல் போன்றவற்றுக்கு காந்த சக்தியே பெரிதும் உதவியாக இருக்கிறது.
இந்த உயிரினத்தின் உடலில் உள்ள அற்புத காந்த சக்தியைப் பற்றிய ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. 
உருண்டையான உடலமைப்புடைய இதன் உடலைச் சுற்றிலும் முட்கள் இருக்கும். இந்த கடல் முட்தோலிகளின் சிறப்புகள் விநோதமானவை..!

உலகில் உள்ள எல்லாக் கடல்களிலும் காணப்படுகின்ற இந்த உயிரினத்தின் விலங்கியல் பெயர் ஈக்கினாய்டியா என்பதாகும். 

ஒவ்வொரு பகுதியிலும் இதன் வகைகள் மாறுபட்டு இருந்தாலும் இதன் உடலானது ஐந்து சமமான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். 
கடல் அட்டைகள், நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களின் 
குடும்ப வகையைச் சேர்ந்த நெருங்கிய உறவுமுறை எனலாம். 
படிமம்:Nerr0878.jpg
இதன் முட்தோலிகள் அடிப்பகுதியில் உள்ள குழாய்க் கால்கள் மூலம் மெதுவாக நகர்ந்து கடலின் அடிப்பகுதிகளிலும், பாறைகளின் உள்புறத்திலும் ஒட்டி உயிர் வாழ்கின்றன. 

பாறைகளில் ஒட்டிக் கொள்ள வசதியாக இதன் அடிப்பகுதி தட்டையாகவும், மற்ற இடங்களில் ஒட்டுவதற்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது. 
இக்குழாய்க் கால்கள் மூலம் அது மணலில் குழிதோண்டி உள்ளே போகவும் முடியும். குழாய்க் கால்களில் 24 மணி நேரமும் கடல் நீர் உள்ளே போவதும், வருவதுமாக இருந்து கொண்டேயிருக்கும். இதன் உதவியால்தான் கடல் முட்தோலிகள் நகர முடிகிறது.

உடலின் மேற்புறத்தில் கூம்பு வடிவில் இருக்கும் பல குச்சி முள்களை எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த நேரமும் அசைத்துக் கொண்டேயிருக்கும். 

இந்த முள்கள் மனிதரைக் குத்தினால் பல மணி நேரம் வரை வலி இருந்து கொண்டே இருக்கும். ஆனால் உயிருக்கு பாதிப்பு வராது.

பரமசாதுவான பிராணியாக இருந்தாலும் கடலுக்குள் ஸ்கூபா டைவிங் செய்பவர்கள் இதன் முள்கள் குத்திவிடாமல் கவனமாகப் பார்த்துச் செல்ல வேண்டும். 
அதே நேரத்தில் மனிதர்களை விரட்டி வந்து குத்துவதும் இல்லை. 

ஆனால் டையாடியா என்ற வகை மட்டும் 
கொடிய விஷம் உடையது எனத் தெரிய வந்துள்ளது.
உடலின் நடுப்பகுதியில் அமைந்துள்ள வாய்ப்பகுதியைச் சுற்றி நுண்ணிய எலும்புத்துண்டுகள் இருப்பதால் கடினமான கடல் செடிகளையும் பிடுங்கித் தின்பதற்கு வசதியாக உள்ளது. 

உயிரியல் ஆராய்ச்சிகள் பலவற்றுக்கு கடல் முட்தோலி ஒரு மாதிரி உயிரியாகவும் பயன்பட்டு வருகிறது. 

குறிப்பாக, கரு உருவாதல் ஆராய்ச்சிக்கும் 
ஸ்பெர்ம் செல் ஆராய்ச்சிக்கும் பேருதவியாக உள்ளது.

உடல் முழுவதும் உள்ள நரம்புகள் மூலம் கடல்நீர் உட்புகுந்து உள்ளே செல்கிறது. இதன் மூலமாகத்தான் சுவாசமும், கழிவு நீக்கமும் நடைபெறுகின்றன. 

கடல் தாவரங்களை மட்டுமே இவை விரும்பிச் சாப்பிடும். 
கடல் நாய்கள், விலாங்கு மீன்கள், துப்பாக்கி மீன்கள் போன்றவை 
கடல் முட்தோலிகளையும் தின்றுதான் உயிர் வாழ்கின்றன.

உடலில் உள்ள முள்களை மட்டும் அகற்றி விட்டு இதன் உருண்டையாக உள்ள பகுதியை மட்டும் எடுத்து சமைத்து சாப்பிடுவது ஜப்பானியர்களின் வழக்கம். 
இந்த உணவுக்கு சஸ்மி, சுஸி என்றும் அவர்கள் பெயர் வைத்துள்ளனர். 
அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட இரு நாடுகளில் இருந்தும் கடல் முட்தோலிகளை இறக்குமதி செய்தும் சுவைமிக்க உணவாக்கி, ஜப்பானில் நட்சத்திர ஹோட்டல்களில் விற்பனை செய்கின்றனர்.


***************************************************************************
சிறுகதை விமர்சனப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற எமது விமர்சனம் .


மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் :



 திருமதி. 



இராஜராஜேஸ்வரி  


அவர்கள்







http://jaghamani.blogspot.com/

"மணிராஜ்”


http://rjaghamani.blogspot.in/

krishna





மூன்றாம் பரிசினை 


வென்றுள்ள 


திருமதி:


 இராஜராஜேஸ்வரி


 அவர்களின் விமர்சனம்:




  • காதல் வங்கி என்கிற தலைப்பில் வழங்கியுள்ள கதை மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் ஆனந்தமான கதைகளத்தைக் கொண்டுள்ளது..!

  • ஜானகி -ரகுராமன் என்கிற பெயர்ப்பொருத்தமும், இதயவானில் ரோஜா மலரும் மொட்டுமாக சிறகடிக்கும் இரு ஜோடிப்பறவைகளும், ஸ்ரீதேவியின் அழகான பொருத்தமான மடிசார் புடவையுடனான படமும் பதிவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது..! 

  • ஜானகியைப்பற்றிய அருமையான வர்ணனைகள், விமான ஓடுதளங்களில் தடங்கல்களின்றி கம்பீரமாக கைதேர்ந்த விமானி செலுத்தும் விமானமாக  மன வானில் உயரக்கிளம்ப 
  • ஆரம்பிக்கிறது ..!

  • சுகமாகப்பயணிக்கும் கதையில் நமக்கும் இப்படி ஒரு மகளோ-மருமகளோ கிடைக்கவேண்டுமே என எண்ணவைப்பதில் ஆசிரியர் வெற்றிபெறுகிறார்..!

  • வங்கியின் காசாளரான ஜானகி பணத்தை மட்டுமா எண்ணி எண்ணி கணக்கிடுகிறாள்?

  • அனைவரின் எண்ணத்திலும் அல்லவா தன்னை கைராசியான தனலஷ்மியாக எண்ண வைத்துவிடுகிறாள்..!
  • திருமணத்திற்குப் பின்பான தன் வாழ்க்கையும் தாயைப்போலவே தாலிகட்டிய கணவனின் விருப்பு வெறுப்புகளை ஒட்டித்தான் அமையும் என்பதை மன முதிர்ச்சியுடன் வெளிப்படுத்துவது தந்தைக்குப் பிரணவ மந்திரத்தின் பொருள் உபதேசித்த முருகனைப்போல் தன் வாதத்திற்கு வலு சேர்க்கிறாள்..!
  • தன்  பரம்பரையே ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, நித்யப்படி பூஜை புனஷ்காரங்கள் செய்து ஆனந்தமாக வாழ்ந்தது தான் இன்றைய வாழ்க்கையின்  சந்தோஷம் செளக்யம் ஆகியவற்றின் அடிப்படை என்பதை உணர்த்துகிறாள்..!
  • டைகட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றையோர்
  • கை கட்டி பின் செல்வோரே 
  • என்றெல்லாம் நவீன சிந்தனையில் மிடுக்கான உடையில் உலா வருபவர்களின் வருமானத்தைக் கேட்டுப்பார்த்தால் பெரும்பான்மையோருக்கு அது ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது..!
    • மிகுந்த பொருட்செலவில் பணம் கொட்டி எஞ்ஜினியரிங் கல்லூரியில் படித்துவிட்டு சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் பலரை பார்த்திருக்கிறோம் ..
    • ஆளைக்கண்டு மயங்காதே - அது ஊது காமாலையாகவும் இருக்கலாம் ..
    • உருவு கண்டு  எள்ளாமை வேண்டும் .. அதேபோல வெளித்தோற்றத்திற்கு மட்டும் மயங்கக்கூடாது.. உள்ளத்தின் மாட்சியையும் மதிக்கக்கற்றுக்கொள்ளவேண்டும் ..!
      • விசு ஒரு படத்தில் சொல்வார் - செலவு செய்து கஷ்டப்பட்டுப் படித்து அழகாக டிரஸ் பண்ணிக்கொண்டு காலை முதல் இரவு வரை ஆபீஸில் வேலை செய்பவரை விட எதுவும் படிக்காமலே ஒரு டெல்லி எருமை அவரை விட அதிகமாக சம்பாதிக்கிறது என்று ..!

    • பொறுப்புள்ள பணியில் இருப்பவள் தன் வாழ்க்கையையும் கச்சிதமாக திட்டமிடுவதில் ஆச்சரியப்படுத்துகிறாள்..!
    • கண்டதும் காதல் மட்டுமல்ல காணாமலே காதல் கூட காதல் கோட்டையாய் வெற்றிநடை போட்டதே..!
        • ராதைக்கேற்ற கண்ணனோ
  • சீதைக்கேற்ற ராமனோ
  • கோதைக்கேற்ற கோமானாக 

  • ஒருவருக்கொருவர் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன பொருத்தமான ஜோடியாக வர்ணணைகளால் வண்ணமயான கதையாக ஜாலம் காட்டுகிறது 

  • தாயறியாச் சூலும் உண்டோ ..! தன் மகளின் மனதில் மலர்ந்து முகிழ்த்த காதலின் சுகந்தத்தை கச்சிதமாக மோப்பம் பிடித்து தன் கேள்விகளால் தெளிவாக்குகிறாள்..!

  • ஒரு வகையில் இது வாழ்க்கைக்கல்வியாகவும் தன் மனதை தானே அறிந்து திட்டமிட்டுக்கொள்ளவும் ஜானகிக்கு அமைந்திருக்கக்கூடும்..!

  • சும்மா கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றில்லாமல் தன் வாழ்வின் தேவைகளை உணர்ந்து அரைக்கோடி ரூபாய் சேர்த்து எதிர்காலத்தையும் பாதுகாத்துக்கொண்டு நிகழ்காலத்திலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டு ஒரேகல்லில் இரு மாங்காய் அடிக்கும் புத்திசாலித்தனம் வியப்படைய வைக்கிறது..!    

  • ஆச்சார அனுஷ்டானமில்லாமல், குடிப்பழக்கம், வியாதி போன்றவற்றால் சீரழியும் பலரையும் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது..!

  • லேட்டஸ்ட் பேஷன் படி ஒரு நாள் குடுமியே திரும்ப பேஷன்னு வந்தாலும் வந்துடும், பேஷன்னெல்லாம் எதுவுமே நிரந்தரமானது இல்லையே - உண்மைதானே.!

  • ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தான்  இருப்பார் என்கிற நம்பிக்கையில்  துணைவரை தேடிப்பிடிக்கும் ஜானகியையைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை..

  • கணவன் ராமனாக இருந்தால்  ஜானகியைப் போல் மனைவி கிடைப்பாள் ..!

  • ஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டியது அவள் அம்மா மட்டுமல்ல .. கதையில் கரைந்து போயிருக்கும் நாமும் தானே..!

  • தாயைப்போல் பிள்ளை - நூலைப்போல் சேலை

  • தாயைத் தண்ணீர்த்துறையில் பார்த்தால் பெண்ணைப் படிக்கட்டில் பார்க்கவேண்டியதில்லை என்பார்கள்.. 

  • பெண்ணை சரியாகவே வளர்த்துள்ள அன்னை தன் மகள் ஜானகியைச் சீண்டிப்பார்ப்பது மிகவும் ரசிக்கவைக்கிறது..! 

  • சொக்குப்பொடி தூவியதைப்போல் சொக்கியும் போகிறோம் ..!

  • அபூர்வ விஷயஞானம் மட்டும் ஒரே சொக்குப்பொடியாக ஏற்று தன் முகம் பூராவும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போன்ற பொலிவுடனும், பூரிப்புடனும் இருக்கும் ஜானகியின் பருவ வயதின் பாதிப்பை உணர்ந்த தாயார் நம் மதிப்பையும் பெறுகிறார்..!

  • வேத சாஸ்திரம் படித்த ரகுராமனின் சொற்பொழிவுகளை கதையில் ஜானகியின் மூலம் சொல்லி அமிர்தத்தை தேன் சுவைப் பாலில் கலந்து பருக வைப்பதுபோல் ஆனந்தமாக ருசிக்கவைக்கிறார் கதை ஆசிரியர்..! 

  • ஜானகியின் அழகிலும் புத்திசாலித்தனத்திலும் லஷ்மிகரமான தோற்றத்திலும் சொக்கிப்போய் அவற்றை முழுமையாகப்படிக்கிறோம் நாம்..

  • அதுதானே கதையின் முக்கியக் கரு .. வேறு எந்த கதாபாத்திரம் சொல்லியிருந்தாலும் அலட்சியமாக கடந்துபோகும் அபாயமிருக்கிறதே..!

  • ஜானகியை முதலில் நமக்கு நெருக்கமாக்கி மனதில் இதமாக சிம்மாசனம் போட்டு அமரவைத்துவிட்டு இதோபதேசம் நடக்கிறது .. அம்மா கதை சொல்லி நிலவு காட்டி குழந்தைக்குச் சோறு ஊட்டுவதைப்போல..! 

  • தன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன் வங்கியில் லஷ்மீகரமாக -சாட்சாத் தனலட்சுமியாக பணம் வழங்கும் ஜானகியின் திருமணத்திற்கு வாழ்த்து கூறுவோம்..

  • சீதா கல்யாண வைபோகமே
  • லஷ்மி கல்யாண வைபோகமே
  • ஜானகி கல்யாண வைபோகமே..
  • ஜானகி ரகுராம கல்யாண வைபோகமே..!
  • மாலை சூட்டினாள் ஜானகி மாலை சூட்டினாள்
    மையலாள் தையலாள் ரகுராமனுக்கு சூட்டினாள்..!
  • மனம்போல் மாங்கல்யம் அமையப்பெற்று இனிய இல்லறத்தில் திளைக்கும் ஜானகி தன் அழகில் மெருகேறி மிகவும் லக்ஷ்மிகரமாகத் தோற்றம் அளிப்பதாக வாய் விட்டுப் பாராட்டும் போது, கொடி மின்னலென ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொண்டு கோடி மின்னலாய் ஜொலிக்கிறாள்..!


  •  





    மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


    இனிய நல்வாழ்த்துகள்.



         









        



    மிகக்கடினமான இந்த வேலையை

    சிரத்தையுடன் பரிசீலனை செய்து

    நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

    நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










    இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

    மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

    தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

    இடைவெளிகளில்

    வெளியிடப்பட உள்ளன.



    காணத்தவறாதீர்கள் !


    11 comments:

    1. கடலடியில்தான்
      எத்தனை அழகு உயிரினங்கள்
      கொட்டிக் கிடக்கின்றன.
      அழகோ அழகு.
      மூன்றாம் பரிசு வென்றமைக்கு
      வாழ்த்துக்கள் சகோதரியாரே

      ReplyDelete
    2. மூன்றாம் பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள் ....!
      கடல் அழகும் கண்டேன் நன்றி ...!

      ReplyDelete
    3. அனைத்து படங்களும் அழகோ அழகு... பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

      ReplyDelete
    4. வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

      மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

      அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

      அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

      வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை

      ReplyDelete
    5. முகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் | SUNDAY, FEBRUARY 23, 2014
      மூத்தோருக்கு மரியாதை ➦➠ by: ராஜி

      இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

      மீண்டும் வருவேன்.

      ReplyDelete
    6. கடல் வாழ் உயிரினங்களில் சிலவற்றைப்பற்றி, வெகு அழகான படங்களுடன், சிறப்பான அரிய தகவல்களை அறியத் தந்து அசத்தியுள்ளீர்கள்.

      பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

      >>>>>

      ReplyDelete
    7. ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் தங்களின் விமர்சனம் நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வானது, என் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      இது தங்களின் மிகச்சிறப்பான எழுத்துக்களுக்குக் கிடைத்ததோர் அங்கீகாரம் என்பதில் சந்தேகமே இல்லை.

      >>>>>

      ReplyDelete
    8. பரிசினை அன்புடன் ஏற்று இங்கு தங்களின் இன்றைய பதிவினில் கொண்டுவந்து சிறப்பித்துள்ளது, மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      மிக்க நன்றி.

      >>>>>

      ReplyDelete
    9. குவித்து வைத்துள்ள அழகழகான தாமரை மொட்டுக்கள் போல மேலும் அதிக அளவில் தங்களுக்குப் பரிசுகள் கிடைக்க என் அன்பான பிரார்த்தனைகள்.

      ALL THE BEST !

      பிரியமுள்ள VGK

      o o o o o

      ReplyDelete
    10. ஆழ்கடலின் அடியில் வாழும் அரிய வகை உயிரினங்களைப் பற்றி சிறப்பான படங்களுடன் அழகிய பதிவு!..
      மேலும் விமர்சனப் போட்டியில் பரிசு வென்ற மகிழ்ச்சியான செய்தி!..
      வாழ்க நலம்!..

      ReplyDelete
    11. அற்புத உயிரினங்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம். பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

      ReplyDelete