Saturday, January 14, 2012

வசந்தத் திருநாள் பொங்கல்





சூரிய காயத்ரி
அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ:சூர்ய பிரசோதயாத்

சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.

சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும்

மனத்தில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று. 

யோகாவில் சூரிய நமஸ்காரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் 
தரணியிலே ஒளி பிறக்கும் 
தை மகளின் வருகையிலே 
பரணி சொல்லும் வழி பிறக்கும் 
மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது. “
தமிழர் திருநாளாக பொங்கல் கொண்டாட்ப்படுகிறது..
 பொங்கல் என்பது "பொங்கு' என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும்.
 புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை. அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டு முன் வாசலில் தொங்க விடுவார்கள்.
சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும். அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும். 
குருவிகளுக்காகவேதான் அவற்றைப் பின்னுவார்கள். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும். உணவுச் சுழற்சி பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும்  இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும். அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது. அதனையே பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல்' என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கலஒலியாக குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித்ததும்பும் விழா
கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும் , அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு... 

பொங்தித்தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். சிலர் பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள்.
பால் போல் மனமும் நீர் போல் தெளிவும் 
வார்த்தையில் இனிமையும் கொண்டு 
சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்தும் மங்கல விழா பொங்கல்..


தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது 
கோலப்போட்டி, உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.
படிமம்:Preparation of Pongal.jpg 
[மார்கழி] கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்."இன்று புதிதாய் பிறந்தோம்'' என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது. பழயன கழிந்து புதியன புகுதலே 
தை பொங்கலின தாத்பர்யம் 
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ
படிமம்:Festival crop India pongal Tamil word 14.jpg
தைத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை

மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள்.. பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்..

சூரியனில்லாத பூமி இருண்டு விடும். மழையோ, நீரோ இருக்காது. உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது. பூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது.

பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம்..
bihu Cards, bihu Greetings and Glitter Graphics for Myspace, Orkut
 கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. 
அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். 
வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. 
அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். 
இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். 
உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.


தைமாச பல்லாக்கில்வருகிறது தித்திக்கும் திருவிழா
உள்ளங்கள் பொங்கி வழியபொங்கல் திருவிழா
வாழ்விற்கு வசந்தம் சேர்த்தமகுடம் சூட்டி மகிழ்ந்த
பூமித் தாயே பெருமிதம்கொள்

பண்பட்ட கலாச்சாரத்தின்விதைகளை ஆழ உழுது வை .,
உழவர்கள் இல்லையேல் இந்தவிந்தைகள் எதுவும் இல்லை
என்பதை சிந்தையில் தை

திங்கள் பார்த்து பொங்கி வழியும்பொங்கல் பானைகளாக நம் அனைவரின்
இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .

பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள். வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை இது. கால்நடைகளை நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பார்கள்.

 பிழைப்புக்காக திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள் இந்நாளில் ஒன்றுகூடி மகிழும். 
மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான். விவசாயிகள் தைத் திருநாளை கொண்டாடுகின்றனர்.


http://www.vallamai.com/special/pongal/pongal-2012/1131/#comments வல்லமை மின் இதழில் வெளியான எனது ஆக்கம்..பகிர்ந்திருக்கிறேன்..










ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 
தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம்.
விழாக்கோலம் பூண்டிருந்த மெரீனா கடற்கரை முழுவதும் ஜன சமுத்திரமாக மாறியிருந்தது.
Crowd at Marina beach
பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், வண்டலூர் மிருக காட்சி சாலை உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

14 comments:

  1. மிகவும் அருமையான பகிர்வு. அழகழகான படங்கள்.

    அனைத்தும் சர்க்கரைப்பொங்கல் போலவும், அடிக்கரும்பு போலவும் இனிப்பாகவே உள்ளன.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய மகர சங்க்ராந்தித் திருநாள் நல் வாழ்த்துகள்.

    அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

    ”தை” பிறந்ததும் தாலிகட்ட இருப்போர் வாழ்க்கைகள் தழைக்கட்டும்! சிறக்கட்டும்!!

    ==========================

    செங்கரும்புச் சாறெடுத்து
    இதழினிலே தேக்கி,

    சிந்துகின்ற புன்னகையால்
    துன்பம் நீக்கி,

    மதமதத்த வளையணிந்த
    கைகள் வீசி,

    மங்களமாம் “தை”
    என்னும் மங்கை வருவாள்!

    பொங்கியெழும் புத்தின்ப
    உணர்ச்சி தருவாள்!!

    ========================

    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  2. எப்படியும் நீங்க பொங்கலைப் பற்றி விவரமா பதிவு போடுவீங்கன்னு தெரியும். அதனாலதான் என்னுடைய பதிவில் முன்கூட்டியே அதைக்குறிப்பிட்டு எழுதியிருந்தேன். என்னுடைய எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

    நன்றிகள் பல.

    ReplyDelete
  3. /இதயங்களில் சந்தோஷம் பொங்கி வழியட்டும்/

    என்ற வரிகளுக்குக் கீழ் காட்டியுள்ள அழகான அந்தப்பசுவும். ‘என் செல்லக்கன்னுக்குட்டியும்’ அழகோ அழகு.

    பார்த்ததும் சந்தோஷம் பொங்கி வழிந்தது! ;))))

    ReplyDelete
  4. இன்றும் எல்லாமே அழகு தான்.
    ஒவ்வொன்றையும் வர்ணிக்க வேண்டும் என்றும் ஆசை தான். ”தை” பிறந்து விட்டதால் இன்று நிறைய வேலைகள் உள்ளனவே!

    முக்கியமாக உத்ராயண மகர சங்க்ராந்தி புண்யகால தர்ப்பணம் செய்ய வேண்டும். சூர்ய நாராயணருக்கு பூஜை செய்ய வேண்டும். பொங்கல் நைவேத்யம் செய்து சூடாகச் சாப்பிட வேண்டும்.

    அதனால் இத்துடன் எஸ்கேப் ஆக வேண்டியுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    முடிந்தால் பொங்கல் சாப்பிட்டுவிட்டு தெம்பாக மீண்டும் மாலை வருவேன்.

    ReplyDelete
  5. யானைக்கு அடுத்த படத்திலேயே இப்படிப் பானைகளை கிடுகிடுன்னு உயரமா அடுக்கியுள்ளீர்களே! மேடம்.

    யானை வரும் அதிர்ச்சியில் பானைகள் என்னாகுமோன்னு நேக்கு பயமா இருக்கே! ;))))

    ReplyDelete
  6. பொங்கல் ஆச்சா! பால் பொங்கிச்சா!!

    ரொம்பவும் சந்தோஷம்.

    மனமார்ந்த ஆசிகள்.

    -=-=-=-=-=-=-=-=-

    போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ, என்பது எந்த செடி/மரத்திலிருந்து கிடைக்கிறது.

    அதனை ஏன் நாம் வாங்கிக் கூரையில் சொருகி வைக்கிறோம் என்ற விபரங்கள் தெரிந்தால் சொல்லுங்கோ!

    கரும்பு மஞ்சள்கொத்து வாங்கிவரும் போது இதுவும் விற்பார்கள், வாங்கி வருவோம், வாசலில் சொருகிவைப்போம்.

    அடிக்கும் காற்றில் கீழே தூள் தூளாக உதிரும். வேறொன்றும் இதைப்பற்றிய தாத்பர்யம் இதுவரை எனக்குத் தெரியவில்லை.

    யாரிடமாவது கேட்கணும் என்று நினைத்துக்கொள்வேன். பிறகு போகியும் போய், பொங்கலும் போய், எனக்கு அது மறந்தும் போய் விடுவதுண்டு.

    இன்று நல்லவேளையாக பூலாப்பூ படம் காட்டி என்னிடம் மாட்டியுள்ளீர்கள்.

    மேலும் நீங்க எதுசொன்னாலும், அதுவே எங்களுக்கு வேதவாக்கு

    [You are the Competent Authority, for all these things, as on date, for us. Please explain]

    ReplyDelete
  7. பொங்கல், பண்டிகை, வாழ்த்துகள், சிறப்பு, கடவுள், படைப்பு, வணங்குதல், மக்கள் மகிழ்ச்சி, கூட்டம், மந்திரம், சுலோகம் என ஒரே சேர எல்லாவற்றையும் தங்கள் பதிவின் வாயிலாக இனிய பொங்கலுடன் சுவைக்கின்றேன்,
    உங்களுக்கும், உங்கள் அருமை குடும்பத்தினருக்கும் எங்கள் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    இத் தையில் அத்தை மகள் !
    http://chitramey.blogspot.com/2012/01/blog-post_14.html

    ReplyDelete
  8. Thakkudu 83


    to bcc: me
    அனைவருக்கும் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்! :)

    குறிப்பு - குடும்பத்திற்காக மாடு போல் 'மாங்கு மாங்கு'னு உழைக்கும் மாமாக்களுக்கு சிறப்பு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! :)


    அன்புடன்,
    தக்குடு/


    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..

    சிறப்பு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  10. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.உங்களைப்போல என்னால் அடிக்கடி எழுதமுடியவில்லை.பதிவுப்பக்கம் வரவும் முடியவில்லை.உள்ளூரில் இருப்பதால் வேலைகள் அதிகம்.நல்லது.

    ReplyDelete
  11. தைபிறந்தாள் தரணி எங்கும் மகிழ்ச்சி வெள்ளம்.....

    இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete