Thursday, September 27, 2012

ஸ்ரீ துக்காராம் சுவாமிகள்



விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல .... புண்டலீக வரதே........ ஹரி விட்டலே...விட்டல விட்டல

பாற்கடல் நாயகனான ஸ்ரீவிஷ்ணு உத்தவரிடம்  பூமியில் அவதரிக்குமாறு நத்தைக் கூடு போல உள்ள சிறு வஸ்துவினுள்ளே  சிறு குழந்தையாக்கி அடைத்து மழை பெய்யும் காலத்தில் பூமியில் பீமாரதி நதியில் விழும்படி செய்தார்

பீமா நதியில் விழுந்த  சிப்பி விட்டல் விட்டல் என ஜபித்துக் கொண்டு நீரின் போக்கில் மிதந்து சென்றது. , பாண்டுரங்க நாமத்தை உச்சரித்தவர் உத்தவர் .

குழந்தை வரம் கேட்ட தாமாஜி என்ற விஷ்ணு பக்தர்கனவில் இறைவன் தோன்றி,மறுநாள் பீமா நதிக் கரையில் உனக்கு ஓர் ஆண் குழந்தை கிடைக்கும் என சொல்லி மறைதார்..

கடவுளின் பேரருளால் கிடைத்த அக்குழந்தைக்கு நாமா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.அவரே நாமதேவர்...

ஸ்ரீ நாமதேவரின் மறுபிறப்பெனப் போற்றப்படும் ஸ்ரீ துக்காராம் சுவாமி அவர்கள். சைவ - வைணவ ஒற்றுமையையும் இறையில் வேற்றுமையில்லை என்பதையும் உணர்த்துகிறார்...

 ஸ்ரீ நாமதேவர் பாட விரும்பிய கோடிக்கணக்கான பாடல்களை 
ஸ்ரீ பாண்டுரங்கனே உவந்து எழுதியதாகவும், ஒரு குறிப்பிட்ட அளவே நாமதேவரால் தம் வாழ்நாளில் பாட முடிந்ததாகவும் மீதியைப் பாட இறைவனே அவரை ஸ்ரீ துக்காராம் சுவாமியாகத் தோன்றச் செய்தார் எனவும் நம்பிக்கை ....

தேவநகரத்தில் தானிய வியாபாரியாக வாழ்ந்து வந்த மிகச் சிறந்த தெய்வ பக்தரும், புண்யசீலருமான ஸ்ரீமாதவராவ் என்பவருக்கு மகவாகப் பிறந்தஸ்ரீ துக்காராம். 

பூர்வ ஜன்ம வாசைனையினால் இயல்பிலேயே பேரறிவு படைத்தவராகவும், சங்கீத ஞானம் கொண்டவராகவும், கவிதைகள் புனையும் ஆற்றலுடையவராகவும் விளங்கினார்

ஸ்ரீ துக்காராம் இறைபக்தியின் பொருட்டு குடும்பத்தை சரியாகக் கவினிக்காமல் தம் செல்வங்களனைத்தையும் தானம் செய்து வறுமையில் வீழ்ந்தார்..

 ஸ்ரீ மஹாலட்சுமியே ஒரு ஹரிஜனப் பெண்னாக வந்து கமலாபாய்க்கு
ஸ்ரீ துக்காராம் கொண்டிருந்த பக்தியின் அருமையையும் அதன் வலிமையையியும் உணரவைத்ததன் பின் கமலாபாயும் ஸ்ரீ துக்காராமுடன் சேர்ந்து பாண்டுரங்க சேவையில் தம் மனதைச் செலுத்தினார்.

 கமலாபாயும் பக்தியில் ஈடுபடவே இறைவனே பொறுப்புடன் அந்தக் குடும்பத்திற்கு வேண்டியதைக் கொடுத்து வந்ததுடன் தினமும் ஒரு அதிதி வேடத்தில் ஸ்ரீ துக்காராமுடன் வந்தமர்ந்தும் சில சமயங்களில் உருவமற்றவராகவும் வந்து உணவருந்தும் செய்தி ஊரெங்கும் பரவியது

கிஞ்சன்வாடி கிராமத்தில் வசித்து வந்த தீவிர கணேச பக்தரான வேதியர்
 " ஸ்ரீ துக்காராம் சுவாமியுடன் பாண்டுரங்கன் வந்து உணவருந்தவது போல் நம்முடன் கணேசர் ஏன் வந்து உணவருந்தவில்லை ? எனச் சந்தேகத்தில் ஆழ்ந்ததை ஞான திருஷ்டியால் அறிந்த ஸ்ரீ துக்காராம் சுவாமிகள் அவரைத் தேடி தாமே கிஞ்சன்வாடிக்குச் சென்று தங்களுடன் ஸ்ரீ பண்டரிநாதன் தினமும் வந்து உணவு உண்பது போல, என் உபாசனாமூர்த்தியான ஸ்ரீ கணேசரும் என்னுடன் உணவருந்தும்படி செய்யவேண்டும் "  என்ற விருப்பத்தை நிறைவேற்றினார்.....

 " பக்தவத்சலனான இறைவன் எப்போதும் தூய பக்திக்குச் செவிசாய்ப்பவன் . உள்ளன்புடன் அழைத்தால் அவரும் வந்து உம்மோடு உணவுண்பது உறுதி " என சுவாமிகள் கூறினார்.

ஸ்ரீ துக்காராம் அருகே ஸ்ரீ பாண்டுரங்கருக்கும் அந்த அந்தணர் அருகே 
ஸ்ரீ கணேசருக்கும் இலைகள் போடப்பட்டன.

வெகு நேரம் அந்தணர் அழைத்தும் ஸ்ரீ கணேசர் வராத நிலையில் 
ஸ்ரீ துக்காராம் சுவாமிகள், " கவலை வேண்டாம், கடலில் விழுந்த ஒரு பக்தரின் கப்பலை மூழ்காமல் காப்பாற்றவே கணேசர் சென்றிருந்தார்.
இப்போதுதான் திரும்புகிறார். அதுதான் தாமதத்திற்குக் காரணம் " என ஆறுதல் கூறினார்.

அவர்கள் உள்ளே சென்று பார்க்க கடலின் உப்பு நீர் சொட்டச் சொட்ட 
ஸ்ரீ கணேசர் உள்ளே இருந்தார்.

ஸ்ரீ துக்காராம் அவரை வேண்ட ஸ்ரீ பாண்டுரங்கருடன் தானும் வந்தமர்ந்து 
ஸ்ரீ கணேசர் உணவு உண்டார்.

 ஸ்ரீ துக்காராமை மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

இறைவனில் பேதமில்லை, இறைவனில் பெரிதில்லை சிறிதுமில்லை "

எம் இஷ்டதேய்வம் உம் இஷ்டதெய்வம் என நாம் பேசுவதேல்லாம் அன்பின் வெளிப்பாடே. இறை என்பது ஒன்றே ! அது தாய், நாமேல்லாம் அதன் சேய்.

ஸ்ரீ துக்காராம் இறைவனை பாண்டுரங்கனாக பாவித்து 
பக்தி செலுத்தினார் அவருக்கு இறைவன் பாண்டுரங்கனாகவே 
அருள் செய்தான்.

கிஞ்சன்வாடி அந்தணருக்கு அவர் விரும்பிய கணேச ரூபத்தில் 
அருள் புரிந்தார்.

 இவை அனைத்தும் பரம்பொருளின் அம்சங்களே அன்பதை உணர்வதே நன்மை தரும் - உணரவேண்டிய உண்மை "

இறைவன் உடலுக்கோ, மனதிற்கோ, புத்திக்கோ எட்டாதவனாயினும் தீவிர அன்பினாலும் பக்தியினாலும் அவனை அடைய முடியும்.

முதலில் மனிதன் தான் யார் என்பதை அறியவேண்டும். தமக்குள் பேதமில்லை என்பதை அறியவேண்டும். அதை அறிந்தவன் இறைவனுள் பேதமில்லை என்பதை மிகத்தெளிவாக உணர்வான்....

6 comments:

  1. விட்டல் விட்டல் விட்டல் விட்டல்
    விட்டல் விட்டல் விட்டல் விட்டல்

    ஸ்ரீ பாண்டு ரங்கா, ஸ்ரீ பண்டரிநாதா ஏன் இவ்வாறு என்னை சோதித்தாய்?

    உன் பக்தனான் ஸ்ரீ துக்காராம் கதையை நான் எவ்ளோ முறை கேட்டு மகிழ்ந்துள்ளேன்.

    இந்தப்பதிவினைப் பார்க்க விடாமல், ரொம்பவும் தான் சோதித்து விட்டாய்! பரவாயில்லை.

    அந்த உன் பரம பக்தனான ஸ்ரீ துக்காராம் தன் வாழ்க்கையில் என்ன பாடு பட்டுள்ளார்!!

    அவருடன் ஒப்பிடும்போது எனக்கு ஏற்பட்ட இந்த சோதனை எல்லாம ஒன்றுமே இல்லை தான்.

    >>>>>>

    ReplyDelete
  2. உத்தவர்
    நாம தேவர்
    அவரின் மறுபிறவியாம்
    ஸ்ரீ துக்காராம்

    என சுருக்கமாக மிகச்சுருக்கமாகச் சொல்லிப்போய் விட்டீர்கள்.

    கிஞ்சன்வாடி அந்தருக்கு அவர் விரும்பிய கணேசர் ரூபத்தில் அருள் புரிய வைத்த கதை சுவாரஸ்யமாக உள்ளது.

    >>>>

    ReplyDelete
  3. பண்டரிபுரம் நேரில் சென்றுள்ளேன்.

    அங்குள்ள சந்திரபாகா நதியில் நானும் என் தாயாரும் மனைவியும் என் மூத்த இரண்டு பிள்ளைகளும் ஸ்நானம் செய்துள்ளோம்.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அங்கு சந்திரபாகா நதியின் அக்கரையில் வெகுநாட்கள் முகாமிட்டிருந்தார்கள்.

    அங்கு ஒரே கரும்புக்காடு மட்டுமே.

    போட் ஓட்டிகளும் மிகவும் பக்தி சிரத்தையுடன் இருந்தனர். யாரிடமும் ஒரு பைசா கூட வாங்கிக்கொள்ளாமல் அக்கரைக்குக் கொண்டு சேர்த்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா ஸ்வாமிகளை தரிஸிக்க, இலவசத் தொண்டு செய்தனர். இனிமையாக நினைவில் உள்ள சம்பவம்.

    அப்போது என் மூன்றாம் மகன் பிறக்கவே இல்லை. அவன் பிறப்பு 1982 ஏப்ரில். நான் சொல்வது அதற்கு [ 1976-77 ]முந்திய கதை.

    >>>>

    ReplyDelete
  4. நாங்கள் ஒரு நான்கு நாட்க்ள் அவ்விடம் துக்காராம் போன்ற ஒருவர் வீட்டில் தங்கினோம். அவர் சம்சாரம் பெயர் ரஜினி. நிறைய குழந்தைகள் அவர்களுக்கு. இரவு குளிருக்கு எங்களுக்கு நிறைய போர்வை கம்பளிகளும், தலையணிகளும் கொடுத்து உபசரித்தனர்.

    அவ்ர்கள் வீட்டில் ஏராளமான கம்பளிகள் வைத்திருந்தனர்.

    அந்த துக்காராம் போன்றவரே எங்களை பல இடங்களுக்கு அழைத்துச்சென்று தரிஸனம் செய்து வைத்தார்.

    அதில் ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலும் ஒன்று. இடுப்பில் கை வைத்துக்கொண்டு செங்கல் மேல் நின்ற கோலத்தில் ஸ்வாமி மிக அழகாக இருந்தார்.

    >>>>>

    ReplyDelete
  5. மாறி மாறி வரும் கடைசி படம் மிக அழகாக உள்ளது.

    ஸ்ரீ பக்த துக்காராம் கதையை முழுவதுமாக மிக நகைச்சுவையாக பலமுறை கேட்டு அனுபவித்துள்ளேன்.

    புனேயிலிருந்து 20 கிலோமீட்டரில் உள்ள தேகூ என்ற இடத்தில் வாழ்ந்தவர்.

    இப்போதும் அவர் வாழ்ந்த குக்கிராமமும், அவர் அமர்ந்து பாடிய ஓர் மிகப்பெரிய கல்லும், அவர் வீடும் நினைவுச்சின்னங்களாக அப்படியே உள்ளதாம்.

    மராட்டி மன்னன் வீர சிவாஜிக்கு இவரிடம் மிகுந்த ஈடுபாடு இருந்துள்ளது. பணத்தை துச்சமாக நினைத்த மாபெரும் மஹான் இவர்.

    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவரை உயிருடன் வைகுண்டம் கூட்டிப்போக, புஷ்பக விமானமே பெருமாளால் அனுப்பப்பட்டதாம்.

    >>>>>

    ReplyDelete
  6. மிக நல்ல பதிவு.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும், பகிர்வுக்கும், இப்போது கொடுத்து உதவிய புதிய இணைப்புக்கும் என் ம்னமார்ந்த நன்றிகள்.

    GOOD NIGHT TO PANDURANGAN !

    ReplyDelete