Wednesday, October 24, 2012

கருணா கடாக்ஷம்..!


 

யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம      



வலை ஒத்த வினை கலை ஒத்த மனம்
மருளப் பறை ஆர் ஒலி ஒத்த விதால்

நிலையற்று எளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்

அலைவற்று அசைவற்று அநுபூதி பெறும்
அடியார் முடி வாழ் வைடூரியமே

மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அன்னையின் அன்பிற்கு ஈடாக ஏதும் இல்லை என்பதனாலேயே பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருள்வதாக இறைவனின் அடியார்கள் இறைவனைத் தாய்க்கு நிகராகக் கொண்டு வழிபட்டனர்.

தாயின் வடிவில் அருள் புரியும் அன்னை பராசக்தி
மதுரையில் மீனாட்சியாகஅருள் பாலிக்கிறாள்.
அன்னை மீனாக்ஷி சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை இடையுடுத்து பொற்றாமரைக்குளத்தருகில் கோவில் கொண்டு ஆட்சிபுரியும் மதுரையில் நவராத்ரி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பகல்- இரவு இரு வேளைகளிலும் ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம் என்றும்; ஒன்பது இரவுகள் மட்டும் பூஜை செய்வது நவராத்திரி பூஜை என்றும்  அழைக்கிறோம்... 
முதல் மூன்று நாட்கள் அன்னை சக்தியையும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வீடுகளிலும் கோவில்களிலும் கொலுப்படி அமைத்து வழிபடுவார் கள். பத்தாவது நாளான விஜயதசமியை வெற்றித் திருநாளாகக் கொண் டாடி வருகிறோம்.

சக்தி, செல்வம், ஞானத்தைத் தருவதாக இந்த நவராத்திரி பூஜை அமைந்துள்ளது. 

மதுரை வீதிகளில் நடந்தாலே முக்தி.காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி 

தடாதகை, கோமளவல்லி, அங்கயற்கண்ணி, பாண்டிய ராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி  என்றெல்லாம் அழைக்கப்படும் அன்னை மீனாட்சியின் விகரகம் சுத்தமான் மரகதத்தால் செதுக்கியது தேவலோகச்சிற்பியான மயன் !. மரகதவல்லி என்றும் அருமையாய் அழைக்கப்டுகிறாள் அன்னை !
பொற்றாமரைக்குளம்  இறைவன் சோமசுந்தரேஸ்வரரால்  உருவாக்கப்பட்டது...
பொற்றாமரைக்குளத்தில் தினமும் மலர்ந்த தங்கத்தாமரைகளால் சப்த ரிஷிகளும் அன்னை மீனாட்சியை ஆராதித்து வந்தார்களாம்.

சங்கப்பலகைகொண்டு தமிழ்ப்புலவட்களை சோதித்த இடம் !

மீன் , புழு , பூச்சிகள் என்று எந்த உயிரினமும்  வாழமுடியாத வரம் பெற்ற குளம் !

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய தமிழ்ப்புலவர் இறைவனின் நெற்றிக்கண் வெப்பம் தாளாமல் குதித்த குளம் !

மந்திரமாவது நீறு என்று கூண்பாண்டியனின் தீராத வயிற்றுவலியை  கோவில் பிரசாதம் சமைக்கும் அடுப்பின் சாம்பல் தீர்த்துவைத்து  உணர்த்தியது !

அன்னை மீனாட்சி கருணையே வடிவானவள் என்பதை அவளது நிறம் உணர்த்துகிறது....
மற்றவர்களின் கண்கள் இமைக்க வாய்ப்புண்டு; ஆனால், மீனின் கண்கள் இமைப்பதில்லை.

மீன் இமைக்காமல், தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தன்மையுடையது. அதுபோல், கயற்கண்ணியான மீனாட்சியும், தன் பக்தர்களை இரவும், பகலும் விழித்திருந்து பாதுகாக்கிறாள். 

அவளது கண்கள் இமைப்பதில்லை என்பதால் தான், மதுரையும் தூங்கா நகராக விளங்குகிறது.
மீன்தன் கண் பார்வையாலேயே தன் முட்டைகளை  போஷித்து  காத்து வளர்ப்பதைப்போல் தன் கண் இமையாமல் நம்மையையும் உ;லகத்து உயிர்களைப் பாதுகாத்து ரட்சிப்பதால் அன்னைக்கு மீனாட்சி என்று பெயர் ... 

அன்னை மீனாக்ஷி தன் அருட்கண்களின் பார்வை பட்ட மாத்திரத்தில் அவளது சகல குழந்தைகளுமான புல்- பூண்டிலிருந்து ஆரம்பித்து பிரம்மாதி தேவர்கள்வரை எல்லோரையும் தனது கருணா கடாக்ஷத்தால் நனைத்து அறிவை, உயிரை வளர்த்து உய்வித்து விடுகிறாள்.

.மதுரையில் மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவது கண்கொள்ளாக்காட்சி.

 மீனாட்சி அம்மனின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக மீனாட்சி அம்மனுக்கு புதிதாக ஒரு வைர கிரீடம் தயாரிக்கப்பட்டுள்ளது. 11/2 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு, 300 காரட் எடையுள்ள வைரக்கற்கள், 154 காரட் எடை கொண்ட மரகத, மாணிக்க, கற்கள் பதிக்கப்பட்டுள்ள வைரகீரிடம் அணிந்து அலங்காரமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை !

Front page news and headlines today

11 comments:

  1. நல்ல பதிவு... தொடருங்கள்...

    ReplyDelete
  2. மதுரை மீனாட்சி பற்றிய பகிர்வும் படங்களும் அருமை விஜயதசமி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. விளக்கங்கள் மிகவும் அருமை...

    மிக்க நன்றி அம்மா...

    அப்படியே எங்க ஊருக்கும் வாங்க...

    விழாக்கால வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பதிவு படங்கள் அனைத்தும், எல்லாம் இன்ப மயம்.

    ReplyDelete
  5. தகவல்கள் நிறைந்த நல்ல பதிவு.

    ReplyDelete
  6. 2
    ஸ்ரீராமஜயம்
    -------------

    இந்த
    2012 ஆம்
    ஆண்டின்
    வெற்றிகரமான

    3 2 5 ஆவது
    பதிவு இது.

    2 9 8 நாட்களில்
    3 2 5 பதிவுகள்.;)

    புள்ளிவிபரம்:
    325/298*100
    = 109.06%

    தினமும்
    ஏறக்குறைய
    1.10 பதிவுகள்.

    சாதனையோ
    சாதனையே ;).

    மகிழ்ச்சியோ
    மகிழ்ச்சிகள் ;)).

    ஆனந்தம்
    ஆனந்தம்
    ஆனந்தமே!.;)))

    வெற்றிகள்
    தொடரட்டும் !!!..
    >>>>>>>>>>>>>>>>>

    நவராத்திரி
    மற்றும்
    விஜயதஸமி
    நல்வாழ்த்துகள்.

    செளக்யமாக
    செளகர்யமாக
    செளபாக்யமாக
    சந்தோஷமாக
    சர்வ
    வளங்களும்
    நலங்களும்
    பெற்று
    நீடூழி
    வாழ
    மனம்
    நிறைந்த
    ஆசிகள்

    -oOo-

    ReplyDelete
  7. "மதுரை வீதிகளில் நடந்தாலே முக்தி.காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி"----
    உங்க தளத்தை வலம் வந்தா முக்தி.

    ReplyDelete
  8. /மதுரை வீதிகளில் நடந்தாலே முக்தி.காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி //

    காஞ்சியில்?..

    //வலை ஒத்த வினை கலை ஒத்த மனம்
    மருளப் பறை ஆர் ஒலி ஒத்த விதால்

    நிலையற்று எளியேன் முடியத் தகுமோ
    நிகளம் துகளாக வரம் தருவாய்

    அலைவற்று அசைவற்று அநுபூதி பெறும்
    அடியார் முடி வாழ் வைடூரியமே

    மலையத்துவசன் மகளே வருவாய்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே../

    -- வாசிக்க, வாசிக்க வரிகளில் தாம் எத்தனை கம்பீரம்..

    மலையத்துவசன் மகளே வருவாய்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    ReplyDelete
  9. இந்த
    2012 ஆம்
    ஆண்டின்
    வெற்றிகரமான

    3 2 5 ஆவது
    பதிவுக்கு அன்பான இனிய நல்வாழ்த்துகள்

    >>>>>>

    ReplyDelete
  10. மேலிருந்து இரண்டாவது படத்தில் பசுமையான மீனாக்ஷி தோளில் கிளியுடன் அழகோ அழகு.

    அதிலேயே ’கருணா கடாக்ஷம்’ முழுவதும் உணர முடிகிறது.

    கருணா கடாக்ஷம் தந்துள்ள அம்பாளுக்கு வந்தனங்கள்.

    கடைசியில் காட்டியுள்ள் யானைகளும் ஜோராக உள்ளன.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், ந்ன்றிகள்.

    ReplyDelete