Friday, October 19, 2012

நவராத்திரி ஆராதனை

700 வது பதிவு...............





கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி (கற்பகவல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட கற்பகவல்லி

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா 



எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி செய்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா 

நாகே‌ஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீ‌ஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகே‌ஸ்வரி நீயே உலகினில் துணையம்மா (கற்பகவல்லி)



அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா (கற்பகவல்லி



ஜனமேஜய மன்னன் வியாச முனிவரிடம் நவராத்திரியின் மகிமையையும், அதைக் கொண்டாடும் வழிமுறைகளையும் கேட்ட போது, அவற்றை முனிவர் எடுத்துக் கூறினார்.

கன்னிகா பூஜையைப் பற்றிக் கூறும்போது, குமாரியைப் பூஜிப்பதால் வறுமை நீக்கமும், பகைவர் வெற்றியும், ஆயுள் விருத்தியும், செல்வ வளர்ச்சியும் கிட்டும் என்றும்; 

திரிமூர்த்தி வழிபாடு தனதான்ய விருத்தி, புத்திரப்பேறையும்; 

கல்யாணி வழிபாடு கலைகளில் அபிவிருத்தியும் ராஜசுகமும்; 

ரோகிணியை பூஜிப்பதால் ரோக நிவர்த்தியும்; 

சண்டிகையைப் பூஜிப்பதால் செல்வ வளமும்; 

காளியைப் பூஜிப்பதால் பகைவர் நாசமும்; 

சாம்பவியைப் பூஜிப்பதால் போரில் வெற்றியும் வறுமை நீக்கமும்; 

துர்க்கையைப் பூஜிப்பதால் கொடிய பகைவர்கள் அழிவதோடு பேராற்றலும் பரலோக சுகமும்; 

சுபத்திரையைப் பூஜிப்பதால் மங்களங்களோடு, எண்ணங்கள் பலிதமாகும் பேறும் கிட்டும் என்று கூறியுள்ளார்.
http://www.dollsofindia.com/dollsofindiaimages/goddess-pictures/nava-durga-nine-forms-of-goddess-durga-poster-with-AT25_l.jpg
இந்த ஒன்பது கன்னியரைப் பூஜிக்கும்போது, அந்தந்தப் பெயர்களுக்கு மூலகாரணமாக உள்ள பகவதியைத் துதித்து, அவரவர்க்குரிய சுலோகங் களைக் கூறி வழிபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எங்கும் எல்லாவற்றிலும் பூமியாகவும் நதியாகவும் பிற ஜீவன்களாகவும் நிறைந்திருக்கும் அம்பிகையை வழிபட்டு வளம் பெறுவோமாக.


நவராத்திரியின்போது எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்தும்விதமாக, தெய்வ உருவங்கள் முதல் சிறிய உயிரினங்கள் வரை உள்ள அனைத்து உயிர்களையும் இறைவடிவாக பாவித்து, அவற்றை அழகாக- பொம்மைகளின் காட்சியாகக் கொலு 
வைத்து தினமும் ஆராதனை செய்கிறோம்.





hayagreeva


21 comments:

  1. 700 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    மயிலை கற்பகவல்லியைப் பற்றிய டி.எம்.எஸ். பாடிய பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.படங்களும் பல்வேறு விளக்கங்களும் நன்று.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  3. படங்களும் விளக்கங்களும் அருமை...

    700-க்கு வாழ்த்துக்கள் அம்மா...

    நன்றி...

    ReplyDelete
  4. 700 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்தினபதிவு திரட்டி

    ReplyDelete
  5. துர்க்கையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

    700-வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடருங்கள்.

    ReplyDelete
  6. 700-வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    அனைத்தும் அருமை.

    ReplyDelete

  7. 700-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.பதிவுகள் இடும் உங்கள் வேகம் எனக்கு பலமுறை ஆச்சரியமூட்டியதுண்டு. இவ்வளவு அழகாகப் படங்களுடன் பதிவுகள் இடுவது சாதாரண காரியமல்ல. செய்யும் பணியில் ஒருங்கிணைந்த உள்ளமும் ஆர்வமும் இருந்தாலே அது சாத்தியம். தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. படங்கள் எல்லாம் அற்புதம். 700ம் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. 700 – ஆவது பதிவு! உண்மையிலேயே பதிவுகளை எழுதுவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்! விரைவில் 1001 – ஆவது பதிவினையும் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  10. Bashanangalai ninga nosikittu engalukku verum padathai mattum kattiyamayai kandikindren.

    NOTE:Ennai vittukku kuppidalai.

    ReplyDelete
  11. எங்கும் எல்லாவற்றிலும் பூமியாகவும் நதியாகவும் பிற ஜீவன்களாகவும் நிறைந்திருக்கும் அம்பிகையை வழிபட்டு வளம் பெறுவோமாக."

    700வ்து பதிவிற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்.தொடருங்கள், மேலும், மேலும்.

    ReplyDelete
  12. இன்றைய

    இந்தப்பதிவு

    தங்களின்

    வெற்றிகரமான

    7 0 0 ஆவது

    பதிவு

    என்பதை

    நினைக்க

    மனதுக்கு

    மிகவும்

    மகிழ்ச்சியாக

    உள்ளது.



    அதற்கு

    மனமார்ந்த

    பாராட்டுக்கள்.

    வாழ்த்துகள்.



    தங்களின்

    இந்தப்புனிதப்பயணம்

    நாளொரு

    மேனியும்

    பொழுதுதொரு

    வண்ணமுமாக

    சோர்வின்றி

    தொடரட்டும்.



    -oOo-

    ReplyDelete
  13. 700 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
    அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  14. 700 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!
    தொடர்க! நவராத்திரியில் தங்கள் வலைப்பூவில் பக்தி மணம் கவழ்ந்து மனம் கவர்கின்றது! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  15. 700 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். ஆஹா என்னா படையல் சுண்டல்...

    ReplyDelete
  16. 700 வது பதிவு என்பது
    ஒரு இமாலயச் சாதனையே
    699 பதிவுகளைப் போல
    அருமையான 700 வது பதிவுக்கும்
    மனமார்ந்த நன்றி
    ஆயிரமாயிரமாய் பதிவுகள்
    தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. 700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! அனைத்து படங்களும் மிக அழகு!!

    ReplyDelete
  18. Really happy to see your 700th post madam !!! Hearty Congrats !

    Keep sharing more interesting stuff with all your knowledge and spirit :)

    ReplyDelete
  19. 700 நூறாவது பதிவிற்கு நல்வாழ்த்து. முதலாவது படம் மிக
    பிடித்தது. (ஏன் இப்படித் தடை போடுகிறீர்கள்
    அதை பிரதி எடுக்க விடாது. பதிவும் சிறப்பு வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. தங்களின் வெற்றிகரமான 7 0 0 ஆவது
    பதிவுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  21. காட்டியுள்ள பிரஸாத வகையறாக்கள் அனைத்தும் அருமையோ அருமை.

    கடைசியில் காட்டியுள்ள பிரஸாதம் [வறுத்த முந்திரிகள் மிதக்குதே] அது எனக்கு உடனே சாப்பிடணும் போல ஆசையாக உள்ளது. நாக்கில் நீருடன், வழக்கம் போல ஏமாற்றத்துடன் ;(

    எனினும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.

    ooooo

    ReplyDelete